ஆயிரம் கதை சொல்லி வளர்த்த அன்னையை பற்றி எழுதவா??? அன்பின் இலக்கணமாய் இருந்து என்னை வளர்த்த தந்தையை பற்றி எழுதவா??? எனக்கு அம்மாவை இருந்து என்னை ஆளாக்கிய அக்காவை பற்றி எழுதவா??? இடையில் வந்து, என் இறுதி ஊர்வலத்தில் இருக்க போகும் நண்பர்களை பற்றி எழுதவா??? தவறு என்று தெரிந்தும் நான் செய்த தவறான என் காதலை பற்றி எழுதவா??? ஆயினும் எழுதுகிறேன், என்னை யார் என்று தெரிந்துக்கொள்ள.... தெரிந்தால் சொல்லுங்கள், இல்லையேல், என்னை பின்தொடருங்கள்.........தெரிந்துக்கொள்ள
Monday, July 12, 2010
என்னைத்தேடி ஒரு பயணம்
நான் யாரென்ற கேள்வி, என்னக்குள்ளே எழுகிறது சில சமயம்,
என் பிறப்பிற்கு அர்த்தம் என்ன???
போன ஜென்மத்து கர்மாவா??? இல்லை,
என் பெற்றொர்களின் சுகத்துக்கு கிடைத்த பரிசா??? இல்லை,
ஒரு நோக்கத்தோடு இறைவன் என்னை படைத்தானா??? இல்லை,
அறிவியலின் அறியாமையா??? இல்லை,
இயற்கையின் நியதியா???
வெறுமனே பிறந்தோம், இறந்தோம் என்று இருக்க நான் என்ன ஈசலா???
என்னை யாரென்று கண்டறிய, நான் கண்டெடுத்த ஒரே வழி - என் எழுத்துக்கள்...
ஆகையால் எழுதப்போகிறேன்,
என்னை முழுமையாக உணரும் வரை எழுதப்போகிறேன்,
எதனால் பிறந்தேன் என்று தெரியும் வரை எழுதப்போகிறேன்,
சாகும் நொடி வரை எழுதப்போகிறேன், பார்க்கலாம் அப்பொழுதாவது அறிவேனா என்று???
அதனால் என்னை பெருமிதமாக எண்ணாதீர்கள்,
நான்----
மகாகவி என்று பெயர் பெற்ற பாரதியும் இல்லை,
புரட்சி கவிஞர் என்று பெயர் பெற்ற பாரதிதாசனும் இல்லை,
மக்கள் கவிஞர் என்று பெயர் பெற்ற பட்டுக்கோட்டையும் இல்லை,
பத்மபூஷன் விருது பெற்ற ஜெயகாந்தனும் இல்லை,
எழுத்து சித்தர் என்று பெயர் பெற்ற பாலகுமாரனும் இல்லை,
கவியரசு கண்ணதாசனும் இல்லை,
கவிப்பேரரசு வைரமுத்துவும் இல்லை,
வெறும் ஜடம், என் தேடல் ஆரம்பமாயிற்று......
தேடல் முடியும்பொழுது சொல்கிறேன்,
வந்து தெரிந்துக்கொள்ளுங்கள் - நான் யாரென்று.....
என்னைத்தேடி - நான்!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment