Saturday, December 24, 2011

தொலைபேசி கட்டணம்



தினமும் தொலைபேசியில், 


மணிக்கணக்கில் மருகி,


உரையாடலில் உருகி,


காதலித்தேன், காத்திருந்தேன்,


தவறாமல் வந்தது அவள் அல்ல,


தொலைபேசி கட்டணம்!!!!!

Friday, December 23, 2011

தினம் ஒரு சுனாமி

"என்னங்க என்னையும், குழந்தைகளையும் வெளியில் கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு, இப்படி தூங்கறீங்களே" - சங்கீதாவின் குரலில் கொஞ்சலும், கோபமும் கலந்தே இருந்தன.


"என்னடி இன்னைக்கு கூட சீக்கிரமே எழுந்து, ம்ம்ம்ம்.... போடி"   - தோய்ந்து போன குரலில் படுக்கையை விட்டு எழுந்தான் ராஜேஷ்.


தூக்க கலக்கத்திலும், நேற்று மனைவியிடம் சொன்னதை நினைத்து பார்த்தான், என்னதான் சோம்பலாக இருந்தாலும், விடுமுறை நாளன்று மனைவி, குழந்தைகளுடன் வெளியில் சென்று அவர்களுக்கு தேவையானதை செய்து, அவர்களின் சந்தோஷத்தில் சுகம் காண்பதே எல்லா கணவன்மார்களின் ஏக்கம். 


சட்டென்று கிளம்பி, அனைவரையும் அழைத்துக்கொண்டு ஒரு நல்ல ஹோட்டலில் மதிய உணவை முடித்தார்கள். முடித்த கையுடன் திரைப்படம் செல்லலாம் என்று மனைவி சொல்ல, மறுக்க மனம் இல்லாமல், "போலாம்டா செல்லம்" என்று அங்கே ஒரு மூன்று  மணிநேரம் கழித்தார்கள். 


பின்பு வீட்டுக்குத்தான் போகிறோம் என்ற நினைப்பில் ராஜேஷ் இருக்க, சங்கீதா தனக்கே உண்டான பாணியில், "ஏங்க கொஞ்சம் ஷாபிங் போயிட்டு போலாமே என்று இழுக்க" வண்டி நேராக கடைதெருவில் போய்நின்றது.


மாலை 6 மணிக்கு கடைக்கு உள்ளே சென்றவர்கள், இரவு வீட்டின் கதவில் சாவியை நுழைக்க மணி பதினொன்றை தாண்டி சென்றுக்கொண்டிருந்தது. 


சரி வாங்க எனக்கு செம உடம்பு வலி, நான் தூங்க போறேன் - சங்கீதா சொல்ல.. குழந்தைகள் பாதி தூக்கத்தில் இருக்க. ராஜேஷ் மட்டும் பேனாவையும்,பேப்பரையும் எடுத்துக்கொண்டு வீட்டின் வெளியே உட்கார்ந்து கணக்கு போட தொடங்கினான்.


ஆம், அன்றைய கடைதெருவில், ராஜேஷின் கிரெடிட் கார்டு அவ்வளவு தேய்ந்ததை எண்ணி, அதன் கணக்கு விவரங்களை பார்த்துக்கொண்டிருந்தான், ஒரு வழியாக இரவு ஒரு மணிக்கு மாதம் இவ்வளவு என்று தனது பட்ஜெட்டை முடித்து இரவின் மடியில் உறங்க....


எழுந்திறீங்க, மணி ஏழு. தனது இயந்திர வாழ்க்கைக்கு தயாரானான் ராஜேஷ்.
பரபரப்பான் அலுவலகம், நல்ல வேலை, கை நிறைய சம்பளம், சம்பளத்தின் முக்கால் பகுதி கிரெடிட் கார்டின் தேய்மான செலவுக்கே போய்க்கொண்டிருந்தது.


மணி ஒன்று, மதிய உணவை காண்டீனில் முடித்து விட்டு, தனது இருக்கைக்கு வந்து அமர்ந்தான், அன்று ஜப்பானில் சுனாமி தாக்கியதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்க.. ஜப்பான் மக்களுக்காக பரிதாபப்பட்டான். 


திடிரென்று ஒரு குரல், ராஜேஷ் சார், "உங்கள மேனேஜர் வர சொன்னார்", சொல்லி விட்டு ஆபீஸ் பாய் போக.


ஆம், ஜப்பான் மக்களுக்காக பரிதாபப்பட்ட ராஜேஷ், தனக்காக பரிதாபப்பட்டான். அடுத்த மாத செலவுகளை நினைத்து, ஆம், வேலை பறிபோன சோகத்துடன், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல். நிலைக்குலைந்தான். 


ஆம், நண்பர்களே. சுனாமி தினமும் எங்கே ஒரு இளைஞனை தாக்கிக்கொண்டுதான் இருக்கிறது,  Recession, financial crisis, economy down இப்படி இன்னும் பல ஆங்கில வார்த்தைகளால் உலாவருகிறது. 


இன்று இது போன்ற சம்பவங்கள் இயற்கையே, அனால் இதை சமாளிக்க அனைவரும் செய்யக்கூடிய விஷயம் முடிந்த அளவு கிரெடிட் கார்டு என்னும் மோகத்தை உதறினால், எறும்பை போல் ஆறு மாதம் அல்ல, ஆறு வருடம் கூட சேமிப்பை வைத்து சுகமாக வாழலாம். 


இந்த வேலை போனா, அடுத்த ரெண்டு மாசத்துல இன்னொரு வேலை கிடைக்காதா என்ன?????!!!!!

Wednesday, December 21, 2011

மறதியில் ஒரு உதவி

மனித சமுதாயத்தில் நடக்கும் ஒரு எதார்த்த சம்பவத்தையும், மனித மறதிகளையும் கதையாக இங்கே தொகுக்கவிருக்கிறேன்...

அது மதுரை ரயில்நிலையம், எப்பொழுதும் கூட்ட நெரிசலில் பயணிகள் அங்கும் இங்கும் அலைந்த படியே காட்சி தரும் மிகவும் பரபரப்பான ரயில்நிலையம். 
ஒரு மதிய நேரம், செங்கோட்டையில் இருந்து மதுரை வந்த ஒரு ரயிலில் இருந்து பயணிகள் வெளியில் சென்றுக்கொண்டிருந்தனர்.  ரயில்நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் வேலை மும்மரமாக நடந்துக்கொண்டிருந்த சமயம், அதில் பொறியாளராக வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒருவன் மதிய உணவுக்காக வெளியே சென்றுக்கொண்டிருந்தான்.

அப்பொழுது ஒரு குரல், "தம்பி, ரெண்டு, மூணு அரிசி மூட்டை இருக்கு, கண்ணு மங்களா தெரியுது, தூக்கவும் முடியல தம்பி.... யாராவது கூலி ஆளுங்க இருந்தா வர சொல்லு தம்பி, பணம் கூட குடுத்தறேன்" என்று சொல்ல...

அந்த பொறியாளர்,"அய்யா இங்கயே இருங்க, இங்க யாரும் இருக்க மாட்டாங்க, ரயில் நிலையம் முன்னாடி இருப்பாங்க வர சொல்றேன்" என்று சொல்லிவிட்டு புறப்படுகிறான்.

திடிரென்று ஒரு குரல்,  "என்ன சார் எப்பிடி வேலை எல்லாம் போகுது, எப்ப முடியும்? சீக்கிரம் முடிக்கணும் சார், அடுத்த மாதம் அமைச்சர் வராரு கண்காணிப்பு கேமராவ திறந்துவைக்க..... என்ன புரியுதா என்று சொல்லிவிட்டு போகிறார் அந்த ரயில்வே அதிகாரி.

பொறியாளரின் மனநிலை முற்றிலும் வேலை பற்றியே சிந்திக்க தொடங்க, எப்படி முடிக்கலாம், இன்னும் ஒரு மாத காலத்தில் எப்படியாவது முடிக்கவேண்டும். இன்னும் ஒரு மாதத்தில் முடியுமா? இல்லை என்றால் நமது பெயர் கெட்டு விடுமே!! அலுவலகத்தில் நமக்கு கெட்ட பெயர் வந்து விடுமே, வீண் பலி சுமக்க வேண்டியதாகிவிடுமே.. ஒரு வேளை வேலை பறிபோய் விட்டால்,என்ன ஆகும்.... ஐயோ," இல்ல என்னால் முடியும், கண்டிப்பாக அடுத்த மாதத்திற்குள் எப்படியாவது முடித்துவிடுவேன் என்ற நம்பிக்கையுடன் மதிய உணவிற்காக ஒரு ஹோட்டலில் நுழைக்கிறான். அளவு சாப்பாடு ஒன்று சொல்லி விட்டு, கை கழுவி விட்டு அமைதியாக உட்க்கார்ந்து திட்ட மிடுகிறான் வேலை நிமித்தமாக....

கிட்ட தட்ட, ஒன்றரை மணிநேரம் கடந்து போய்க்கொண்டிருந்தது, திடிரென்று அந்த வயதானவரின் ஞாபகம் வருகிறது, என்ன செய்வது என்று தெரியாமல், பாதி சாப்பாட்டில் எழுந்து மிக வேகமாக ரயில் நிலையம் நோக்கி ஓடிவருகிறான். அந்த வயதான முதியவரை அங்கே காணவில்லை, உதவி என்பது தக்க சமயத்தில் கிடைக்கா விட்டால் அந்த உதவிக்கே பயன் இல்லை, தான் அறியாமல் செய்த தவறை நினைத்து நொந்து, ஒரு பத்து நிமிடம், அங்கே இருக்கும் இருக்கையில் அமர்ந்து முதியவர் பற்றி யோசிக்கிறான். அவர் எப்படி போயிருப்பார்? யாராவது உதவி செய்திருப்பார்களா? இல்லை இங்கேயே இருக்கிறாரா என்று சுற்றும், முற்றும் பார்க்கிறான், அவர் இருப்பதாக எந்த அறிகுறியும் இல்லை. மிகவும் நொந்து துவண்ட போன மனதுடன் வெளியில் செல்கிறான்.

அப்பொழுது ஒரு குரல்,"கொஞ்சம் நில்லு சாமி, செங்கோட்டை போகணும் சாமி, இந்த ரெண்டு மூட்டைய கொண்டு வந்து குடு, உனக்கு பணம் குடுக்குறேன் என்று அந்த வயதான மூதாட்டி சொல்ல... மிக மன நிறைவுடன் அணைத்து மூட்டைகளையும் தூக்கிக்கொண்டு, அந்த மூதாட்டியையும் அழைத்துக்கொண்டு, ஒரு இருக்கையில் அவரை அமரசொல்லி விட்டு, தண்ணீர் பாட்டில் ஒன்று அவரிடம் கொடுத்துவிட்டு வெளியில் வர... பச்சை கோடி பறக்க, ரயில் அதன் இலக்கை நோக்கி பயணிக்க.... இவனும் இலக்கை அடைந்த நிம்மதியுடன் நடை போடுகிறான்....