Thursday, July 21, 2016

என் காதலே!!!



நீண்ட நெடு நாட்களுக்கு பிறகு எழுத வேண்டும் என்ற ஆர்வம் என்னுள்,
காரணம் தெரிந்த பின்பும், எப்படி எழுதாமல் இருக்க,
என்னவளுக்கான என் முதல் படைப்பு இதோ!!!

எழுத நினைத்து ஆரம்பித்தேன்,
ஒன்றும் என் கற்பனை கூடத்திற்கு தோன்றவில்லை,

ஆம்  என்னவள் வந்த பிறகு,
அவளுக்கான என் அனைத்து கற்பனையும் தீர்ந்து விட்டதோ என்னவோ!!!

ஆயினும், கிறுக்க நினைக்க..... இதோ!!!


காதல் என்னும் தேடலில் நான் பயணித்த படகில்,
என் மனம் கரை ஒதுங்கியது அவளோடு!!!

தனிமையில், வெறுமையோடு வாழ்க்கை நகர,
இருளில், இயலாமையோடு மனம் கசிய,

நான் யாரென்று என்னை நானே தேட,

அந்த தேடலில் என்னோட கைக்கோர்த்த,
என்னவளின் நெற்றியில் முத்தமிட்டு,
இல்லை இல்லை, என்னோட நடை போட இருக்கும்,
அவளின் பாதத்தில் முத்தமிட்டு

அழகு என்ற வார்த்தையின்,
பொருள் பெற்ற பதுமை,

இலக்கணம் இல்லாத தமிழில் கூட,
இனிக்கும் அவளின் பெயர்,

ரகுமானின் இசை கூட,
தோற்றுப்போகும், என்னவளின் குரல் முன்,

செந்தமிழிலும் இனிக்கும்,
சுந்தர தெலுங்கிலும் இனிக்கும்,
அவள் பேசினால்,

சிரிப்பிலும் குழந்தை,
அழுகையிலும் குழந்தை,

காதல் என்னும் வார்த்தைக்கு,
காமம் கலந்து கதை சொன்னவள்,

தேடிய இடம் எல்லாம் கிடைக்காத என்னை,
கண்டேன் அவள் கண்களில்,

இன்றோ, தெரிந்தே தொலைக்கிறேன்,
என்னை அவளிடம்,

மீண்டும் தேடி செல்ல!!!



சில நேரங்களில்,
மௌனத்தில் கூட,
காதல் உண்டு,
கண்கள் மட்டும் சந்தித்தால்,
ஆனால் தொலைவில் அவள்,
எப்படி சொல்வேன்,
அவளிடம்,
என் காதலை....

ஆயினும், இந்த ஒரு ஜென்மம் போதாது என்று நினைக்கிறேன்,
என் காதல் முழுவதும் சொல்ல!!!