Tuesday, May 10, 2011

கீற்றும் காலமும்

கீற்றுவில் கிறுக்க ஒருவன் பிறந்தான் - இறந்த காலம்,

கீற்றுவில் கிறுக்க கிறுக்கிக்கொண்டிருக்கிறான் - நிகழ் காலம்,

கீற்றுவில் தன் கிறுக்கல்களை பதிந்து இவன் கவிஞன் ஆவான் - எதிர் காலம்!!!

பறிகொடுத்தவன்

ஒற்றை ரூபாயை,
பறிகொடுத்த சோகத்தில்,
ஒருவன் - பிணம்....

Saturday, May 7, 2011

கருப்பு நிலா



கருப்பு ஆடைக்கொண்டு,
கருப்பு நிலாவை மூடியது ஏன்,
இருந்தும் பௌர்ணமியாய் மின்னுகிறது,
அவள் கண்கள்,

கண் இமைக்கும் நேரத்தில்,
கடைக்கண்களை காட்டி,
களவாடி போனாலே என்னை,

கலாச்சாரம் என்னும் கைற்றில்,
அடிமாடாய் கட்டுப்பட்டு,
முகம் மூடி நிற்கிறாயே,

உன் ஆசை முகம் பார்க்க,
ஆசையாய் வந்த எனக்காக,
கருப்பு நிலாவின்(உன்) முகம் காட்டுவாயா???

அமிர்தம்

அமிர்தம் சுவைக்க ஆசைப்பட்டேன்,
இதோ ஆசை நிறைவேறியது,
என்னவள் வந்த பிறகு!!! 

Thursday, May 5, 2011

யுத்தம்


கத்தியின்றி,
இரத்தமின்றி,
யுத்தம் செய்தேன்,

ஆம் காதல் செய்தேன்!!!

ஒற்றை தாமரை


காய்ந்த இந்த புல்களுக்கு நடுவில்,
எப்படி இந்த ஒற்றை தாமரை,
ஓ, ஒருவேளை என்னவளின்,
கால்தடம் பதிந்த இடமாக இருக்குமோ!


Tuesday, May 3, 2011

கல்யாணத்திற்கு பின் நண்பர்களுக்குள் பிரிவு ஏன்?



ஒரு சிறிய அலசல்.

ஆம் நண்பர்களே, இது ஒரு விவாதிக்க கூடிய, பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான நிகழ்வு தான். முதலில் நண்பர்கள் - யார் இவர்கள்? எப்படி அனைவரது வாழ்விலும் ஒரு தவிர்க்க முடியாத சொந்தமாக இருக்கிறார்கள்.
நட்பு என்றால் உயிரையும் கொடுப்பேன் என்று சொல்லும் அளவுக்கு என்னதான் இருக்கிறது? ரத்தசொந்தத்தை விட அவ்வளவு மேலோங்கிய விஷயமா இந்த நட்பு என்பது? இப்படி பல பல கேள்விகள் நம்முள் எழுந்துக்கொண்டே இருந்து தான் வருகிறது... சரி பார்ப்போம்.

நண்பன் :-

"டேய் ஷங்கர் பென்சில் கொண்டு வரல டா, உன் கிட்ட இருக்கா" - இப்படி ஒன்றாம் வகுப்பில் அறிமுகம் ஆகும் நண்பன்,

"டேய் ஷங்கர், பொண்ணுக்கு எப்படியோ கல்யாணத்த முடிச்சிட்டேன். பையனுக்கும் இந்த வருஷம் முடிச்சிட்டா, என்னோட கடமை முடியும்டா" - இப்படி இறுதி நாட்கள் வரை தொடரும் ஒரு உன்னதமான உறவு தான் நண்பன்.
இந்த இரண்டு காலக்கட்டத்திற்குள் எத்தனை எத்தனை பாசம், நேசம், பரிவு, பிரிவு, சண்டை, கோபம், காதல் கலந்துரையாடல், ஐயோ சொல்லிக்கொண்டே போகலாம் நாம் அனைவரும் அனுபவித்த ஆராயந்துப்பார்க்க முடியாத விஷயங்கள்(சந்தோஷங்கள்).

ஆம், அனைவரது வாழ்விலும் நிச்சயம் உங்கள் சோகத்தில் முழுமையாக பங்குப்பெற்றவன் நண்பனாகவே இருப்பான்.  அப்படி பட்ட நண்பன் என்பவன் எப்படி சிறிது காலம் தனிமை படுத்தப்படுகிறான். அந்த தனிமையால் எப்படி இன்னொருவன்(இவனும் நண்பனே) தவிக்கிறான். இதுவும் ஒரு இயல்பாக நிகழும் காலத்தின் மாற்றமே. 
இதற்க்கு காரணக்கர்தா ஒன்றே ஒன்று தான்.

காதலும் கல்யாணமும் :-

பெண் - இவர்களுக்கு இப்படி ஒரு சக்தியா என்று நினைக்க தோன்றுகிறது அல்லவா. இப்படி பட்ட உறவை கூட இவர்கள் நினைத்தால் கண்டிப்பாக தவுடு பொடியாய் ஆக்கிவிடலாம் என்று. 

ஆண் - இவன் நிச்சயம் ஒரு கோமாளி ஆக்கப்படுகிறான் காதல் என்னும் கரையை கடக்கும் பொழுது. இல்லை என்று சொல்வோர், கண்டிப்பாக பொய் அதிகம் பேசுபவர்களாக இருக்க கூடும். எனக்கு தெரிந்து நண்பர்கள் பகிர்ந்து கொள்ளாத விஷயங்கள் என்றால் முதலில் வந்து நிற்பது "ஒரு பெண்ணுடன் பழகும் பொழுது தான்", காதல் என்று வந்தால் சுத்தம் கண்டிப்பாக மறைக்கப்படும்.
இது அவர்களின் தவுறு இல்லை, அறியாமை தான் எங்கே இவளை பற்றி, நம் நண்பர்கள் ஏதாவது சொல்லி விடுவார்களோ? எதுக்கு டா இந்த காதல் கத்திரிக்காய் என்று எல்லாம் கேலி செய்வார்களோ என்று ஒரு பயம்? இப்படி பல பல சிந்தனைக்குள் தள்ள படுகிறான், பின்பு அதுவே மறைக்கப்படுவதற்கு முதல் படியாய் நின்று விடுகிறது.
ஆனால் இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இந்த மறைக்கப்பட்ட காதலுக்கும், காதலிக்கும் எதாவது பிரிச்சனை என்றால் இவன் முதலில் நாடுவது நண்பர்களை தான். இப்ப மட்டும் எப்படி தான் நண்பர்கள் கண்ணுக்கு தெரிவாங்களோ?  அது போகட்டும், இந்த காதலை கல்யாணம் என்று அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் போது தான், இந்த நண்பர்கள் கூட்டம் உள்ளே வரும். வந்த பிறகு ஒரு வழியாக எப்படியோ பெற்றவர்களின் சம்மதத்தோடோ, இல்ல அவர்களை எதிர்த்தோ, இல்லை அவர்களின் சம்மதம் இல்லாமல் கட்டாயப்படுத்தியோ கல்யாணம் நடந்து முடிகிறது. 

இனி தான் நம் தலைப்பின் கருவுக்குள் வந்திருக்கிறோம், ஆம் கல்யாணத்திற்கு பின் நண்பர்கள் ஏன் பிரிகிறார்கள்??? இந்த கேள்விக்கான விடை இங்கே தான் இருக்கிறது.

"ஆசை அறுபது நாள்,
மோகம் முப்பது நாள்"

நண்பர்களே,  இனி நான் என்னதான் விளக்கி சொன்னாலும் மேலே குறிப்பிட்ட அந்த இரண்டு வரிகள் தான் முதல் மூலக்காரணங்கள். ஆனால் அது மட்டுமே காரணங்களும் இல்லை. சரி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.  கல்யாணத்திற்கு முன் கட்டை வண்டியில் மெதுவாக பயணம் செய்தவன், திடீர் என்று கனரக மோட்டார் வாகனத்தை அதிக சுமை ஏற்றி நெடுஞ்சாலையில் பயணம் செய்தல் எந்த அளவுக்கு பதற்றம் இருக்குமோ - அது தான் திருமண வாழ்க்கையிலும். இப்படி திடீர் என்று பாதை மாறி பயணிக்கும் சமயத்தில் நண்பர்களை மறப்பது ஒரு இயல்பான் விஷயம் தான். காரணம் அந்த சுகமான சுமை(மனைவி) இவனை மட்டுமே நம்பி தன் அணைத்து உறவுகளையும் உதறி விட்டு வருகிறாள். அப்படி வருபவளை சிறிது காலம் நிமிடம் கூட பிரியாமல் பார்த்து கொள்வது கணவனின் கடமை தானே. ஆயினும் நண்பர்களை மறப்பது தவறு தான். என்ன செய்வது மேலே குறிப்பிட்ட இரண்டு வரிகளும் திடீர் திடீர் என்று வந்து எட்டிப்பார்ப்பதால், நண்பர்கள் சுத்தமாக மறக்கப்படுகிறார்கள். 

இப்படி பாசத்தை பகிர்ந்துக்கொள்ள மூன்றாவதாக(குழந்தை) ஒருவர் வரும் பொழுது தான், இவர்களின் இடையே கொஞ்சம் இடைவெளி உருவாகும். அந்த இடைவெளியை மீண்டும் நிரப்ப இவன் தேடும் ஒரு உன்னதமான உறவு தான் நண்பன். 

நண்பர்களே,  ஆகையால் இந்த தற்காலிக பிரிவை நினைத்து வருத்தப்படாமல், அந்த பிரிவையும் ஒரு சுகமான சுமையாக மாற்றிக்கொள்பவன் தான் உண்மையான நண்பன். 

ஏனென்றால், கல்யாணத்திற்கு பின் உங்களால் நிச்சயம் உங்கள் நண்பர்கள் தனிமை படுத்தப்படுவார்கள்,
ஆகையால் நீங்கள் புரிந்துக்கொண்டால், உங்கள் நண்பர்களும் புரிந்துக்கொள்வார்கள் அல்லவா!!!

இதோ இந்த உன்னதமான உறவுக்காக என் சிறிய கவிதையோடு முடிக்கிறேன்,

 அம்மாவின் அரவணைப்போடு,
 அப்பாவின் அதட்டலோடு,
அக்காவின் பாசத்தோடு,
அண்ணாவின் துணையோடு,
தங்கையின் வருடலோடு,
தம்பியின் துணையோடு,
வளர்ந்தான் ஒரு அனாதை சிறுவன்,  
தன் நண்பனோடு!!!

என்னவளை தேடி ஒரு பயணம்,



 என்னவளை தேடி ஒரு பயணம்,

நீரில் தேடினேன்,
முத்தாய் இருந்தால்,

நிலத்தில் தேடினேன்,
வைரமாய் இருந்தால்,

காற்றில் தேடினேன்,
தென்றலாய் இருந்தால்,

ஆகாயத்தில் தேடினேன்,
எல்லையற்றவளாய் இருந்தால்,

நெருப்பில் தேடினேன்,
சுட்டெரிக்கும் சூரியனாய் இருந்தால்,

அவள் முகம் பார்க்க என் மனக்கண்ணாடி ஏங்கிய சமயத்தில்,
எட்டிப்பார்த்தால் வெட்கத்துடன்,
என்னவள் அங்கே!!!