என்னவளை தேடி ஒரு பயணம்,
முத்தாய் இருந்தால்,
நிலத்தில் தேடினேன்,
வைரமாய் இருந்தால்,
காற்றில் தேடினேன்,
தென்றலாய் இருந்தால்,
ஆகாயத்தில் தேடினேன்,
எல்லையற்றவளாய் இருந்தால்,
நெருப்பில் தேடினேன்,
சுட்டெரிக்கும் சூரியனாய் இருந்தால்,
அவள் முகம் பார்க்க என் மனக்கண்ணாடி ஏங்கிய சமயத்தில்,
எட்டிப்பார்த்தால் வெட்கத்துடன்,
என்னவள் அங்கே!!!
No comments:
Post a Comment