Saturday, May 7, 2011

கருப்பு நிலா



கருப்பு ஆடைக்கொண்டு,
கருப்பு நிலாவை மூடியது ஏன்,
இருந்தும் பௌர்ணமியாய் மின்னுகிறது,
அவள் கண்கள்,

கண் இமைக்கும் நேரத்தில்,
கடைக்கண்களை காட்டி,
களவாடி போனாலே என்னை,

கலாச்சாரம் என்னும் கைற்றில்,
அடிமாடாய் கட்டுப்பட்டு,
முகம் மூடி நிற்கிறாயே,

உன் ஆசை முகம் பார்க்க,
ஆசையாய் வந்த எனக்காக,
கருப்பு நிலாவின்(உன்) முகம் காட்டுவாயா???

No comments:

Post a Comment