Monday, August 9, 2010

பெயர் மாற்றப்பட்டுள்ளது

வழிந்தோடும் வாலிப கனவு

இரவு பத்து மணி,

புறம் எங்கும் கருமை சூழ்ந்திருக்க,
கண் இமைகள் கருவிழியை மூட,


மறு நொடி,


அகத்தினுள் கேட்டது காக்கையின் காலை வணக்கம்,
மரக்கிளைகளின் நடுவே சூரியன் எட்டி பார்க்க,

தலை முடியை கோதி காபி கொடுத்தால் என்னவள்,
கொடுத்தவளை கட்டியணைத்து காதல் ரசம் புரிந்த வேளையில்,

மறுபடியும் யாரோ தலையை கோத,
விளித்து பார்த்தால்  அம்மா,
நிஜமான காபியை குடித்து விட்டு தூக்கம் கலைந்தேன்.

சிறிய புன்னகையோடு!!!

துவக்கமே இல்லாத முடிவு

காதல் கடிதங்கள்

வரவேற்ப்பு

Saturday, August 7, 2010

பூங்காவின் இருக்கைகள்

எச்சரிக்கை

சுவடுகள்

சொல்லடி

தனிமை விரும்பி




































இந்த உலகத்தில் விரும்பி தேட ஆயிரம் இருந்தும்,
உன்னை தேடி அலையும் உன் விரும்பி நான்,

அன்றாட வாழ்க்கையில் இருந்து கொஞ்சம்,
புறம் சென்று பார்க்க,
அகத்தினுள் ஆழமாய் சென்றேன்,

சென்ற சிறுது நேரத்தில் நிசப்தம்,
இருண்ட வெளிச்சத்தில் ஒரு அமைதியான ஆர்ப்பாட்டம்,
சல்லடைக்குள் எட்டிப்பார்க்கும் சூரியனின் வெட்க்கப்பார்வை,
கரையும் காகத்தின் சத்தமில்லாத காலை வணக்கம்,
அம்மாவின் கைகள் தலையை கோத,
அப்பாவின் அன்பு அதட்டலுடன் இன்றைய நாள் ஆரம்பம்,

காலை உணவை காகத்திற்கு முன்பு உண்டு,
நகர பேருந்தின் நெருசலில்,
முண்டியடித்து அலுவலகம் சென்று,
எப்பொழுதும் சாட்டையின் கையில்,
பம்பரமாய் சுற்றிவிட்டு,

இரவு வீடு வந்து சேர்ந்து,
சற்று இளைப்பாறி,
இரவு உணவை உண்டபின்,
தூக்கத்திற்கு செல்லும் முன் நாளைய நிகழ்வுகள் கண்முன்,
இன்றைய தூக்கத்தை கெடுக்க, ஐயகோ!!!

பிறப்பிற்கு முன்,
இறப்பிற்கு பின்,
இருக்கும் நீ,
நான் பயணிக்கும் இந்த வாழ்க்கை பயணத்தின் போது,
என்னை சந்திக்க மாட்டாயா???

தனிமை(உன்னை விரும்பும்) விரும்பி!!!

Friday, August 6, 2010

என்றும் அன்புடன்




















என்றும் அன்புடன்.........

ஒவ்வொரு கடிதத்தின் கடைசி வரி,
என் கடிதத்தின் முதல் வரி என்னவளுக்காக,

திருமணம் என்னும் திருநாளில்,
திருத்தேரில் என்னோடு ஏறிய,
என்னவளுக்காக எழுதும் கடிதம்,




அன்புள்ள உயிரே,

நலம் நலம் அறிய ஆவல்,
நான் இங்கு நலம், 
அதுபோல நீயும் நலம் என்று நினைக்கும் உன் அன்பு உள்ளம்,

இதுபோல் காதல் ரசம் கலந்து,
காமத்தின் காரம் உணர்ந்து,
எழுதிய கடிதம் இதோ,.

திருமணத்தின் ஐந்தாவது நாளில்,
பட்டாளம் புறப்பட்ட என்னுள்,
எழுந்த ஏக்கத்தின் வெளிப்பாடு இதோ,

மூன்று நாள் ரயில் பயணத்தில்,
மூன்று ஜென்மம் வீணானது போல் ஒரு தவிப்பு,
அந்த தவிப்பின் வெளிப்பாடு இதோ,

பனிபடர்ந்த மலையில்,
பனி உருகுவது போல,
மனித இரத்தம் உருகும் நேரத்தில் உன் நினைப்பு இதோ,

ஏன் முதல் வரியில் கடைசி வரியை சேர்த்தேன் தெரியுமா???
கடைசி வரி எழுதுவது முன் எங்கே குண்டு என் உடம்பை துலைத்துவிடுமோ என்று???

சேர்த்தேன் என்றும் அன்புடன் என்று.....


இதோ மனைவியின் கடிதம்,

மரியாதைக்குரிய ஜெனரல் அவர்களுக்கு,

போரில் வீரமரணம் அடைந்த என் கனவரின் உடலை எங்கள் சொந்த ஊருக்கு அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வந்தது அவனின் கடிதமும், அவனும்....

ஆனால் அவன் பிணமாக!!!



Thursday, August 5, 2010

பேருந்தில் ஒரு பெண் சிலை

பேருந்து நிறுத்தம்,
அலை மோதும் கூட்டம்,
என் வழி பேருந்துக்காக காத்திருக்கும் வேளையில்,
எதிர் வழி பேருந்து வந்து நிற்க,
சற்றே தலை நிமிர்ந்த என்னை,
கருப்பு புடவையில்,
கருப்பு கூந்தலை கலைத்துவிட்ட மேகம் போல்,
கருப்பு கண்ணாடி அணிந்து கண்முன் நின்றால்,
நெஞ்சில் பதித்தேன் சதி என்னும் சத்தியம் இவள் தான் என்று,


என் வழி மறந்து அவள் வழி போனேன்,
ஒன்று அல்ல, இரண்டு அல்ல,
இரண்டு வருடம் அவள் பின்னால்,
காதலை சொல்ல நாக்கு துடிக்க,
அதை ஏனோ என் நெஞ்சம் மறுக்க,
இறுதியில் அச்சம் தவிர்த்து அவள் முன் சென்றேன்,
பேருந்து படியில் இறங்கிய அவள் தடுமாறி என் கைபிடிக்க,
அதே புன்னகையுடன் கண்ணாடியை கழற்ற அவளின் இரு மீன்களோ இல்லை,


இருந்தும் மாலையிட்டேன் கண்கள் இல்லாத என் கருப்பு சிலைக்கு!!!

கால் தடம்

கால் தடம் நோக்கி ஏக்கத்தில் ஒரு ஏழை சிறுவன் வெளியே,
வருவான் என்று எதிர்நோக்கும் ஒரு கூட்டம் உள்ளே,
உணவு மட்டும் தனியே யாருக்கு காத்திருக்கிறது???
கிருஷ்ணா ஜெயந்தி என்னும் நாளில் ஒரு கிறுக்குத்தனம்.....

முதிர்க்கன்னி

முதிர்க்கன்னி,
விலைபேசினார்கள்,
வாங்க அல்ல விற்க,
ஆனால் விலைபோனது என்னவோ அவளின் மானம்,
கரைந்துஒடியது என்னவோ அவள் கண்ணீர்,
காரணம் முதிர்ந்து விடாத கன்னியின் முதுமையின் வயது....

Sunday, August 1, 2010

வாழ்த்துக்கள்



இதோ ஒரு புதிய பயணம் இனிதே ஆரம்பிக்கும் நேரம்,
இந்த பொன்னான தருணத்தில்,
என் நண்பனுக்கான,
என் கிறுக்கல்கள்,
கீழே,

திருமணம் என்னும் இந்த நாள்,
உன் வாழ்வில் ஒரு பொன்னால்,
திருவும், மதியும் சேரும்,
ஒரு இனிய நாள்,

வாழ்ந்த வாழ்கையை துலைத்து,
வாழப்போகும் வாழ்கையை தேடி,
வாழ வந்தவளின் கைப்பிடிக்கும்,
ஒரு நன்னாள்,

காதலின் மிருதுவை வருடிய உனக்கு,
கல்யாணத்தின் நெருடலையும் வருடும்,
நேரம் வந்துவிட்டது,

காமத்தில் லயித்து,
காதலை துறந்து,
வாழ்கையின் நிஜத்தை மறந்துவிடாதே,

தாம்பத்யம் என்னும் கதவை,
திறக்கும்பொழுது விட்டுக்கொடுத்தல்,
என்னும் சாவியை மறந்துவிடாதே,

அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து,
மெட்டி ஒலியை கேட்க, பிள்ளைகளின் சத்தமும் கேட்க,
ஆரம்பிக்கும் இந்த நாளில் என் மனமார வாழ்த்துக்கள், 

நேற்றைய நினைவுகள் மனதில் ரணங்களாய்,
இன்றைய நிகழ்வுகள் கண்களில் நீராய்,
நாளைய வருகைகள் இனிதே நடக்க,

உன்னவளுடன் என்றும் நீ!!!


என்றும் உன் மகிழ்ச்சியை எதிர்நோக்கும்,
கோவை ராக்கர்ஸ் நண்பர்கள்!!!

சுதந்திரம்



சுதந்திரம்,
எதற்காக வாங்கினோம்???
அதன் நோக்கம் என்ன???
இதோ ஒரு சிறிய கண்ணோட்டம்.

உயிரை காக்கும் மருத்துவமனையில்,
உடலை மட்டும் பார்க்கும் மருத்துவர்,

பாதுக்காப்பு தரவேண்டிய காவல்நிலையம்,
காலபைரவர்களின் இருப்பிடம்,

கல்வி என்னும் காற்றைக்கூட,
ஜாடியில் அடைத்து பணம் பார்க்கும் ஒரு கூட்டம்,

அரசியல் என்னும் அரிச்சுவடியில்,
சாக்கடை என்னும் சாற்றை கலக்கும் கூட்டம்,

புலம்புவதால் மட்டும் பிரிச்சனை தீர்ந்து விடுமா???
நிச்சயம் இல்லை, இருந்தும் குறை சொல்ல வேண்டிய கட்டாயம் நம்மை
போன்ற மக்களுக்கு, அதுவும் நடுத்தர மக்கள் என்று நிச்சயம் சொல்லலாம்.

ஆகஸ்ட் 15, 1947, சுதந்திரம் என்னும் காற்றை சுவாசித்த முதல் நாள் எப்படி என்று நம்மால் அறிய முடியாது, அறியபோவதும் இல்லை.  இருந்தும் அன்றைய இந்தியா எப்படி என்று ஒரு சிறிய ஆராய்ச்சி செய்தால் மிக நன்றாகவே இருக்கும்.

காரணம், சமுதாய வளர்ச்சி என்றே சொல்லலாம், என்னை கேட்டால் வெள்ளையர்களுக்கு நாம் நன்றி சொல்வதே தகும்.  ஆளுமை வர்க்கம் என்று  நினைத்தே இங்கு வந்தாலும், அவனால் முடிந்தவற்றை செய்து விட்டே திரும்பி இருக்கிறான்.

இன்றைய மக்கள் நாம் கொஞ்சமாவது சிந்தித்து செயல்படவேண்டிய நிலை உள்ளது,
நேரு நமக்கு நன்றாக தெரிந்த முகம், கேட்டால் தியாகி.... ஆனால் இந்திய அரசியலை முழுவதுமாக ஏலம் எடுத்த குத்தகைக்காரர் என்றே சொல்லலாம்.. இன்றும் அவரின் வழி தான் வந்துக்கொண்டிருக்கிறது. 

எதற்கு அங்கே எல்லாம் செல்ல வேண்டும், நமது ஊரிலேயே பல குள்ளநரிகள் இருக்கும் போது, இதை எல்லாம் வைத்து பார்க்கும் பொழுது வெள்ளையனின் ஆட்சியே தொடர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது....

இதோ அறுபது வருடங்கள் முன்பு வெள்ளையர்களால் இட்ட சாலைகள் இன்றும் இருக்கிறது நம் ஊரில். இன்றைய சாலைகளின் நிலை உங்களுக்கே நன்றாக தெரியும்.

ஆனால் ஒன்று ஒரு வேலை அந்த ஆட்சி தொடர்ந்திருந்தால் நிச்சயம் பல பிரிச்சனைகள் இருந்திருக்காது, ஆனால் என்ன அடிமைகள் என்ற பட்டதோடு வாழ்ந்திருப்போம்..

எப்படியோ இந்த வருட சுதந்திரதினமும், ஒரு விடுமுறை கொண்டாட்டமாகவே இருக்கட்டும்.... சுதந்திரம் எதற்கு என்ற கேள்வி தான் எழுகிறது இறுதியில்?????

Tuesday, July 27, 2010

அழுகை





அழுகை ஒரு மனிதனின் உன்னதமான,
பாசத்தின் வெளிப்பாடு,


முதல் முறை அழுதேன்,
அமைதியான கருவறையிலிருந்து,
ஆடம்பரமான இந்த உலகை காணும் பொழுது,


இரண்டாம் முறை அழுதேன்,
என் தாகத்திற்கு தேவையான,
தாய்பாலுக்காக,


மூன்றாம் முறை அழுதேன்,
கோவில் திருவிழாவில்,
அசைந்தாடும் ராட்டினதுக்காக,


நான்காம் முறை அழுதேன்,
பள்ளிக்கூடம் பார்த்துவிட்டு,
திரும்பி விட்டுசென்ற என் தாயை பார்த்து,


ஐந்தாம் முறை அழுதேன்,
அக்காவை போல்,
நானும் பேனாவில் எழுத,


ஆறாம் முறை அழுதேன்,
படிக்காமல் ஊர் சுற்றி,
ஊரை சுற்றி வாங்கிய தந்தையின் அடிக்காக,


ஏழாம் முறை அழுதேன்,
கோடிக்கணக்கில் பணம் வாங்கி அழுதான் ஒருவன்,
அதை நூறு ரூபாய் கொடுத்து பார்த்ததுக்காக,


எட்டாம் முறை அழுதேன்,
வறுமையில் வாடி நின்ற,
என் பெற்றோரை பார்த்து,


ஒன்பதாம் முறை அழுதேன்,
வறுமையிலும் என்னை அணைத்து,
அதை துரத்திய என் தந்தைக்காக,


பத்தாம் முறை அழுதேன்,
கணவன் சிறையில் இருக்க,
கட்டுமரமாய் எங்களை கரைசேர்த்த என் தாய்க்காக,


பதினோராம் முறை அழுதேன்,
என் இரண்டாம் தாய்,
அக்காவின் திருமணத்தில்,


பண்ணிரெண்டாம் முறை அழுதேன்,
சொந்தங்கள் என்னை பார்த்து சிரிக்க,
நட்புகளின் கை என் தோலை தட்டி கொடுத்ததுக்காக,


பதிமூன்றாம் முறை அழுதேன்,
என் முகத்தை பார்க்காமல்,
மனதை மட்டும் பார்த்து வந்தவளுக்காக,


பதினான்காம் முறை அழுதேன்,
காமத்தின் வழியில் பார்த்த எனக்கு,
காதலின் ஆழத்தை புரிய வைத்த என்னவளுக்காக,


பதினைந்தாம் முறை அழுதேன்,
தொடர்ந்து வந்து என்னை தூக்கி வளர்த்த சொந்தம்,
இடையில் இடு காடை நோக்கி சென்ற பொழுது,


பதினாறாம் முறை அழுதேன்,
என்னை விட்டு சென்ற என் பெற்றோர்கள்,
என் பிள்ளைகளாக  பிறந்த பொழுது,


பதினேழாம் முறை அழுதேன்,
பல்லு முளைக்கும் முன்னே,
ஓடி வந்து அப்பா என்று அழைக்க,


பதினெட்டாம் முறை அழுதேன்,
பள்ளிப்படிப்பு முடித்து,
பட்டதாரியாய் என் கண்முன்னே,


பத்தொன்பதாம் முறை அழுதேன்,
காதல் என்னும் கடிவாளத்தை போட்டுக்கொண்டு,
படி தாண்டி சென்ற என் மகளுக்காக,


இருபதாம் முறை அழுதேன்,
வாரிசு என்று நினைத்து வந்த மகன்,
நினைக்கும் முன்னே சுவரில் புகைப்படமாய் மாலையுடன்,


இருபத்தியோராம் முறை அழுதேன்,
நினைவில் அல்ல,
என் நினைவுகள் மட்டும்,


இறந்த பின்பு என்னவளுக்காக அவளின் தனிமையை நினைத்து......


அழுகை தொடரும்!!!!  



Saturday, July 17, 2010

ஆறாவது விரல்

மழை காலம்,
சில்லென்ற பனிக்காற்று,
அறை முழுவதும்,
குளிர் சாதன வசதி,
இருந்தும் வெப்பம்,
தாங்காமல் அழுகிறது நுரையீரல்,
காரணம் ஆறாவது விரல்??? 

பிச்சை

அலங்காரத்தோடு பிச்சை எடுப்பவன் உள்ளே,
மனதார பிச்சை எடுப்பவன் வெளியே,
------ ஒரு கோவில்.

Friday, July 16, 2010

சட்டை சொன்னது

சட்டையின் அழுக்கை,
பொருட்படுத்தாமல் நடந்தேன்,
சட்டை சொன்னது,
அம்மாவின் கையை,
அதிகம் தேய்ந்து போகாமல் பார்த்துக்கொள் என்று..........

Thursday, July 15, 2010

குழப்பம்

உருண்டையாய் ஒரு இடம் - தலை,
கருப்பு நிறத்தில் நூல் - தலைமுடி,
இரண்டு கருப்புநிற கோடுகள் - புருவம்,
இரண்டு கருப்புநிற கோலிகுண்டுகள் - கண்கள்,
இரண்டு துவாரம் கொண்ட ஒரு இடம் - மூக்கு,
சங்கு போன்ற இடம் - கழுத்து,
குச்சிகள் போன்ற உறுப்பு - கைகள்,
ஐந்து சிறிய குச்சிகள் - விரல்கள்,
செதில்கள் - நகங்கள்,
குச்சிகள் இணையும் பகுதி - மார்பு,
பானை போன்ற இடம் - வயிறு,
இரண்டு பெரிய குச்சிகள் - கால்,
ஐந்து சிறிய குச்சிகள் - கால் விரல்கள்,

இப்படி ஒரு உருவம் இருந்தால் அதன் பெயர் மனிதனாம்,

வேற்றுகிரக மனிதனை(நம்மை) ஆராயந்துக்கொண்டிருக்கும்,
ஒரு வேற்றுகிரக மனிதனின் குழப்பம்!!!

Wednesday, July 14, 2010

ஒருமுறை

ஒருமுறை தாயின் வருடல்,
ஒருமுறை தாயின் தாய்ப்பால்,
ஒருமுறை தாயின் கையால் சோறு,
ஒருமுறை தாயின் மடியில் தூக்கம்,
ஒருமுறை தாயின் முத்தம்,
ஒருமுறை தந்தையின் வளர்ப்பு,
ஒருமுறை தந்தையின் அதட்டல்,
ஒருமுறை தந்தையின் தோழ்சாய்தல்,
ஒருமுறை தந்தையின் பெருமை,
ஒருமுறை தந்தையின் முத்தம்,
ஒருமுறை அண்ணனின் வழிகாட்டல்,
ஒருமுறை தம்பியின் பிடிவாதம்,
ஒருமுறை அக்காவின் பாசம்,
ஒருமுறை தங்கையின் அழுகை,
ஒருமுறை நண்பனின் தழுவல்,


ஒருமுறை வேண்டும் என்ற ஒருமுறை ஏக்கத்தில் - ஒரு அனாதை!!!

கண்டேன் உன்னை!!!

நீ - நீயா???
நான் - நீயா???
நாம் - நீயா???
நாங்கள் - நீயா???
நாம் எல்லோரும் - நீயா???

உன்னைக்கான நான்,
எங்கே வரவேண்டும்???
எப்படி வரவேண்டும்???
யாரோடு வரவேண்டும்???
எதைக்கொண்டு வரவேண்டும்???

உன்னை கைகாட்டிய பல பேர், ஆனாலும் ஒரே குழப்பம்,
ஒரு இடத்தில் மஞ்சள் உடையோடு,
ஒரு இடத்தில் பச்சை உடையோடு,
ஒரு இடத்தில் வெள்ளை உடையோடு,
ஒரு இடத்தில் ஆடையே இல்லாமல்,

உனக்கு பிடித்த உணவு என்று வைத்தார்கள், அதிலும் ஒரே குழப்பம்,
ஒரு கூட்டம் பருப்பும், நெய்யும் வைத்தனர்,
ஒரு கூட்டம் கடாவெட்டி பொங்கல் வைத்தனர்,
ஒரு கூட்டம் மாட்டு இறைச்சி வைத்தனர்,
ஒரு கூட்டம் பன்றி இறைச்சி வைத்தனர்,

நீ இருக்கும் இடமென்று அழைத்துச்சென்றார்கள், அங்கேயும் ஒரே குழப்பம்,
ஒரு இடத்தில் பாலனாக அமர்ந்திருந்தாய்,
ஒரு இடத்தில் தம்பதிக்கோலத்தில் நின்றிருந்தாய்,
ஒரு இடத்தில் தாடியுடன் சோக நிலை,
ஒரு இடத்தில் சுவரைக்காட்டி நீ என்றனர்,

இத்தனை குழப்பத்தில் உன் பெயரை கேட்க மறந்துவிட்டேன்,
இறுதியில் சொன்னார்கள் - கடவுள் என்று.....

அதன்பின் கண்டேன் உன்னை, எங்கே தெரியுமா???

குஷ்டரோகி கைப்பிடித்து கூட்டிச்சென்ற ஒரு இளைஞனுக்குள்,
உடல் உறுப்புக்களை தானம் செய்ய காத்துக்கிடந்த ஒரு பெண்மணிக்குள்,
தின்பண்டம் வாங்கிட தந்த பணத்தை பிச்சையிட்ட ஒரு மழலையின் சிரிப்பில்,

அட முட்டாள் மனிதர்களே!

நீங்கள் சொன்ன கடவுளை இங்கே காணுங்கள் - என்னைப்போல!!!

Tuesday, July 13, 2010

குருதி






குருதி,
குருதி,
குருதி,
உனக்கான விலைதான் என்ன???


கங்கையைப்போல் உடம்பெல்லாம்,
ஊடுருவி விளையாடும் குருதியே,
உனக்கான விலைதான் என்ன???


சிற்றாறு, பேராறு, எங்க ஊரு வாய்க்காலு,போல 
உடம்பெல்லாம் பாய்ந்தோடும் குருதியே,
உனக்கான விலைதான் என்ன???


கண்ணிமைக்கும் நேரத்தில் காற்றாறு போல,
உடம்பெல்லாம் பாய்ந்தோடும் குருதியே,
உனக்கான விலைதான் என்ன???


பத்து நொடி முடியும் முன்னே,
இதயத்த துடிக்க வைக்க பாய்ந்தோடும் குருதியே,
உனக்கான விலைதான் என்ன???


பண்ணிரெண்டு ஆரம்பித்து, பண்ணிரெண்டு முடியும் முன்னே,
பண்ணிரெண்டாயிரம் மைல்கள் பயணிக்கும் குருதியே,
உனக்கான விலைதான் என்ன???


என்னோட கண்ணு முன்னே என் நண்பன் அடிப்பட்டு,
என் மடியில் சாய்ந்தப்போ, உசுர மட்டும் களவாடி போன குருதியே,
உனக்கான விலைதான் என்ன???


எத்தனையோ சொந்தம் சேர்ந்து வந்து நின்னாலும்,
ரத்த சொந்தம் எங்கேனு??? உன்ன சொல்லி பேசுறோமே குருதியே,
உனக்கான விலைதான் என்ன???


உன்ன தேடி ஒரு கூட்டம் ஆஸ்பத்திரியில் காத்துக்கிடக்க,
உன்ன வாங்கி பத்திரமா நடை போடுது இன்னொரு கூட்டம்,


இத்தனையும் பார்த்துக்கிட்டு,
மௌனமா நிக்கிறியே,
உன்னோட பதில கொஞ்சம் சொல்லமாட்டாயா குருதியே???


குருதியின் பதில் :-


என்னை சொல்லி குற்றமில்லை,
உன்னை சொல்லி குற்றமில்லை,
அறிவியலின் அறியாமையும்,
நடைமுறையின் நாடகத்தன்மையும்,
நிஜங்களின் பொய்யுமே,
இதற்கான பதில்.....


புண்ணியம் தேடி ஆலயம் செல்வோர் - ஒரு கூட்டம்,
அந்த ஆலயத்திற்கு நன்கொடை செய்ய - ஒரு கூட்டம்,
கத்தையாக பணத்தை புண்ணியம் தேடி போடும் - ஒரு கூட்டம்,


அட மதிக்கெட்ட மடையர்களே,
கங்கை என்று என்னைக்கூறி,
வாரி இறைக்க மனம் இல்லையா???
வாரி இறைத்து பாரும்,
புண்ணியம் வந்து சேரும்...


எனக்கான விலை - ரத்ததானம்!!!

Monday, July 12, 2010

என் முதல் நாயகன்




கதாநாயகன்,
என் முதல் நாயகன்,
என் தந்தை,


நான் செய்த புண்ணியம்,
நீ என் தந்தையாக,
நீ செய்த பாவம்,
நான் உன் பிள்ளையாக,


மலைகளின் அரசியாம் நீலகிரியில்,
வானுயர்ந்த சோலைகளும்.
தேயிலை தோட்டங்களும்,
இயற்கை கொஞ்சும்,
மலைகளுக்கு நடுவில்,
வறுமையின் வாசத்தோடு,
பிறந்தாயே,


குடும்பத்தின் சுமைதாங்க,
மூத்தவனாய் வந்தாயே,


முட்டி மோதி முறுக்கு வித்து,
பள்ளிக்கூடம் போனாயே,


பாசம் வைக்க அக்கா ஒன்னு,
சண்டை போட தங்கை ஒன்னு,
கேட்டு நடக்க தம்பி ஒன்னு,
நல்லது செய்ய அம்மாவும்னு,
பக்குவமா வளந்தாயே,


பள்ளிப்படிப்ப முடிச்சிவிட்டு,
பட்டயம் படிக்க போனாயே,


தேடி வந்த வேலை வேணாம்னு,
வண்டி ஓட்ட போனாயே,


பாச மலர் தங்கச்சின்னு பாசம் வெச்சு வளத்தாயே,
பாசம்னா என்னென்னு சொல்லி, பாதியிலே போனாலே,


கேட்டு நடக்க தம்பி இருக்கானு, நினைச்சப்போ
கேட்டு நடக்க நீயாருனு கேட்டுட்டானே,


நொந்துபோய் நீ இருந்தவேளையில,
எம்பொண்ண கட்டிக்கோன்னு அக்கா வந்து கேக்கையில,


சந்தோஷமா கட்டிக்கிட்டு,
மலை இறங்கி வந்தாயே,


சித்தப்பானு சொந்தமா நீ நினைச்சு போகயில,
வாடகைய வசூல் பண்ண கூலி ஆளா வெச்சாங்களே,


ஆசைக்கு ஒன்னு,
ஆஸ்திக்கு ஒன்னு, பெத்துக்கிட்டு,


வண்டி வாங்கி ஓட்டலாம்னு,
கடன உடன வாங்கிப்போட்டு,


கஷ்டப்பட்டு ஓட்டும் போது,
அப்பளமா நொருங்கி போக,


இந்த வேலை வேண்டான்னு,
வேற வேலை செய்ய போக,


அந்த வேலை நல்லா போக,
வீடு மேல வீடு கட்டி ராஜபோகமா வாழ்ந்தாயே,


அப்பனும் மகனும் நேருக்கு நேர் பார்த்தா,
தோஷம்னு அறிவாளி ஜோசியக்காரங்க சொன்னப்ப,


நா பாக்க எம்மகன் வளரோணும்,
அவன பாத்தா இந்த உசுரு போகும்னா, போகட்டும்னு சொன்னாயே,


ஆசையோடு தோழுல போட்டு வளத்தாயே,
எம்பாவம் உன்ன சேர,


மறுபடியும் அடிப்பட்டு, மிதிப்பட்டு,
நடுத்தெருவு வந்தாயே,


கல்யாண வயசுல பொண்ணு ஒன்னு,
படிக்க வேண்டிய வயசுல பையன் ஒன்னு,


வேற வலி தெரியாம,
விஷம் குடிக்க்கலாமானு கேட்டையே,


கண்ணு எல்லாம் கண்ணீர்,
இன்னும் கண்ணுல நிக்கிது அந்த சோகநீர்,


சமையல் கட்டுப்பக்கும் போனதில்ல, இருந்தும்
வாழ வலி தேடி சமையல் வேலை செயஞ்சாயே,


விடியக்காலில விடியுமுன்னே  எந்திருச்சு,
 ஊரடங்கும் வரை கண்ணு முழிச்சு பாடுப்பட்டு,


சிறுக சிறுக சேத்திவெச்சு,
சிக்கனமா பொண்ணு கல்யானத்த கணக்கு போட,


சந்தோஷமா முடிஞ்சு போச்சு,
எம்பொண்ணு கல்யாணம்னு சொல்லி சொல்லி சந்தோஷப்பட்டு,


வாழ்கையில கடந்து வந்த பாதைகள திரும்பி பாத்தா,
மனசுக்குள்ள சாட்டை அடி,
வெளியில சிரிப்பு வெடி,
அட இவ்வளவு  தானான்னு,


வாழ்கையில இத்தணையும் பாத்து விட்டு,
கொஞ்சம் கூட தளராம கம்பீரமா நிக்கிறியே,


உன்ன போல வாழணும்னு மனசுக்குள்ள தோனுதப்பா ,
நீ பட்ட கஷ்டத்த பாத்தா வேண்டாம்னும் தோனுதப்பா,


திரும்பவும் சொல்றேன்,


நான் செய்த புண்ணியம்,
நீ என் தந்தையாக,
நீ செய்த பாவம்,
நான் உன் பிள்ளையாக,



உன்னை போல் ஒருவன் யாரும் இல்லை,
ஒருவன் மட்டும் உன்னை போல் - நான்!!!