Thursday, August 5, 2010

பேருந்தில் ஒரு பெண் சிலை

பேருந்து நிறுத்தம்,
அலை மோதும் கூட்டம்,
என் வழி பேருந்துக்காக காத்திருக்கும் வேளையில்,
எதிர் வழி பேருந்து வந்து நிற்க,
சற்றே தலை நிமிர்ந்த என்னை,
கருப்பு புடவையில்,
கருப்பு கூந்தலை கலைத்துவிட்ட மேகம் போல்,
கருப்பு கண்ணாடி அணிந்து கண்முன் நின்றால்,
நெஞ்சில் பதித்தேன் சதி என்னும் சத்தியம் இவள் தான் என்று,


என் வழி மறந்து அவள் வழி போனேன்,
ஒன்று அல்ல, இரண்டு அல்ல,
இரண்டு வருடம் அவள் பின்னால்,
காதலை சொல்ல நாக்கு துடிக்க,
அதை ஏனோ என் நெஞ்சம் மறுக்க,
இறுதியில் அச்சம் தவிர்த்து அவள் முன் சென்றேன்,
பேருந்து படியில் இறங்கிய அவள் தடுமாறி என் கைபிடிக்க,
அதே புன்னகையுடன் கண்ணாடியை கழற்ற அவளின் இரு மீன்களோ இல்லை,


இருந்தும் மாலையிட்டேன் கண்கள் இல்லாத என் கருப்பு சிலைக்கு!!!

No comments:

Post a Comment