Sunday, August 1, 2010

வாழ்த்துக்கள்



இதோ ஒரு புதிய பயணம் இனிதே ஆரம்பிக்கும் நேரம்,
இந்த பொன்னான தருணத்தில்,
என் நண்பனுக்கான,
என் கிறுக்கல்கள்,
கீழே,

திருமணம் என்னும் இந்த நாள்,
உன் வாழ்வில் ஒரு பொன்னால்,
திருவும், மதியும் சேரும்,
ஒரு இனிய நாள்,

வாழ்ந்த வாழ்கையை துலைத்து,
வாழப்போகும் வாழ்கையை தேடி,
வாழ வந்தவளின் கைப்பிடிக்கும்,
ஒரு நன்னாள்,

காதலின் மிருதுவை வருடிய உனக்கு,
கல்யாணத்தின் நெருடலையும் வருடும்,
நேரம் வந்துவிட்டது,

காமத்தில் லயித்து,
காதலை துறந்து,
வாழ்கையின் நிஜத்தை மறந்துவிடாதே,

தாம்பத்யம் என்னும் கதவை,
திறக்கும்பொழுது விட்டுக்கொடுத்தல்,
என்னும் சாவியை மறந்துவிடாதே,

அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து,
மெட்டி ஒலியை கேட்க, பிள்ளைகளின் சத்தமும் கேட்க,
ஆரம்பிக்கும் இந்த நாளில் என் மனமார வாழ்த்துக்கள், 

நேற்றைய நினைவுகள் மனதில் ரணங்களாய்,
இன்றைய நிகழ்வுகள் கண்களில் நீராய்,
நாளைய வருகைகள் இனிதே நடக்க,

உன்னவளுடன் என்றும் நீ!!!


என்றும் உன் மகிழ்ச்சியை எதிர்நோக்கும்,
கோவை ராக்கர்ஸ் நண்பர்கள்!!!

1 comment:

  1. தாம்பத்யம் என்னும் கதவை,
    திறக்கும்பொழுது விட்டுக்கொடுத்தல்,
    என்னும் சாவியை மறந்துவிடாதே, i like this line

    ReplyDelete