ஆயிரம் கதை சொல்லி வளர்த்த அன்னையை பற்றி எழுதவா??? அன்பின் இலக்கணமாய் இருந்து என்னை வளர்த்த தந்தையை பற்றி எழுதவா??? எனக்கு அம்மாவை இருந்து என்னை ஆளாக்கிய அக்காவை பற்றி எழுதவா??? இடையில் வந்து, என் இறுதி ஊர்வலத்தில் இருக்க போகும் நண்பர்களை பற்றி எழுதவா??? தவறு என்று தெரிந்தும் நான் செய்த தவறான என் காதலை பற்றி எழுதவா??? ஆயினும் எழுதுகிறேன், என்னை யார் என்று தெரிந்துக்கொள்ள.... தெரிந்தால் சொல்லுங்கள், இல்லையேல், என்னை பின்தொடருங்கள்.........தெரிந்துக்கொள்ள
Saturday, August 7, 2010
தனிமை விரும்பி
இந்த உலகத்தில் விரும்பி தேட ஆயிரம் இருந்தும்,
உன்னை தேடி அலையும் உன் விரும்பி நான்,
அன்றாட வாழ்க்கையில் இருந்து கொஞ்சம்,
புறம் சென்று பார்க்க,
அகத்தினுள் ஆழமாய் சென்றேன்,
சென்ற சிறுது நேரத்தில் நிசப்தம்,
இருண்ட வெளிச்சத்தில் ஒரு அமைதியான ஆர்ப்பாட்டம்,
சல்லடைக்குள் எட்டிப்பார்க்கும் சூரியனின் வெட்க்கப்பார்வை,
கரையும் காகத்தின் சத்தமில்லாத காலை வணக்கம்,
அம்மாவின் கைகள் தலையை கோத,
அப்பாவின் அன்பு அதட்டலுடன் இன்றைய நாள் ஆரம்பம்,
காலை உணவை காகத்திற்கு முன்பு உண்டு,
நகர பேருந்தின் நெருசலில்,
முண்டியடித்து அலுவலகம் சென்று,
எப்பொழுதும் சாட்டையின் கையில்,
பம்பரமாய் சுற்றிவிட்டு,
இரவு வீடு வந்து சேர்ந்து,
சற்று இளைப்பாறி,
இரவு உணவை உண்டபின்,
தூக்கத்திற்கு செல்லும் முன் நாளைய நிகழ்வுகள் கண்முன்,
இன்றைய தூக்கத்தை கெடுக்க, ஐயகோ!!!
பிறப்பிற்கு முன்,
இறப்பிற்கு பின்,
இருக்கும் நீ,
நான் பயணிக்கும் இந்த வாழ்க்கை பயணத்தின் போது,
என்னை சந்திக்க மாட்டாயா???
தனிமை(உன்னை விரும்பும்) விரும்பி!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment