Sunday, August 1, 2010

சுதந்திரம்



சுதந்திரம்,
எதற்காக வாங்கினோம்???
அதன் நோக்கம் என்ன???
இதோ ஒரு சிறிய கண்ணோட்டம்.

உயிரை காக்கும் மருத்துவமனையில்,
உடலை மட்டும் பார்க்கும் மருத்துவர்,

பாதுக்காப்பு தரவேண்டிய காவல்நிலையம்,
காலபைரவர்களின் இருப்பிடம்,

கல்வி என்னும் காற்றைக்கூட,
ஜாடியில் அடைத்து பணம் பார்க்கும் ஒரு கூட்டம்,

அரசியல் என்னும் அரிச்சுவடியில்,
சாக்கடை என்னும் சாற்றை கலக்கும் கூட்டம்,

புலம்புவதால் மட்டும் பிரிச்சனை தீர்ந்து விடுமா???
நிச்சயம் இல்லை, இருந்தும் குறை சொல்ல வேண்டிய கட்டாயம் நம்மை
போன்ற மக்களுக்கு, அதுவும் நடுத்தர மக்கள் என்று நிச்சயம் சொல்லலாம்.

ஆகஸ்ட் 15, 1947, சுதந்திரம் என்னும் காற்றை சுவாசித்த முதல் நாள் எப்படி என்று நம்மால் அறிய முடியாது, அறியபோவதும் இல்லை.  இருந்தும் அன்றைய இந்தியா எப்படி என்று ஒரு சிறிய ஆராய்ச்சி செய்தால் மிக நன்றாகவே இருக்கும்.

காரணம், சமுதாய வளர்ச்சி என்றே சொல்லலாம், என்னை கேட்டால் வெள்ளையர்களுக்கு நாம் நன்றி சொல்வதே தகும்.  ஆளுமை வர்க்கம் என்று  நினைத்தே இங்கு வந்தாலும், அவனால் முடிந்தவற்றை செய்து விட்டே திரும்பி இருக்கிறான்.

இன்றைய மக்கள் நாம் கொஞ்சமாவது சிந்தித்து செயல்படவேண்டிய நிலை உள்ளது,
நேரு நமக்கு நன்றாக தெரிந்த முகம், கேட்டால் தியாகி.... ஆனால் இந்திய அரசியலை முழுவதுமாக ஏலம் எடுத்த குத்தகைக்காரர் என்றே சொல்லலாம்.. இன்றும் அவரின் வழி தான் வந்துக்கொண்டிருக்கிறது. 

எதற்கு அங்கே எல்லாம் செல்ல வேண்டும், நமது ஊரிலேயே பல குள்ளநரிகள் இருக்கும் போது, இதை எல்லாம் வைத்து பார்க்கும் பொழுது வெள்ளையனின் ஆட்சியே தொடர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது....

இதோ அறுபது வருடங்கள் முன்பு வெள்ளையர்களால் இட்ட சாலைகள் இன்றும் இருக்கிறது நம் ஊரில். இன்றைய சாலைகளின் நிலை உங்களுக்கே நன்றாக தெரியும்.

ஆனால் ஒன்று ஒரு வேலை அந்த ஆட்சி தொடர்ந்திருந்தால் நிச்சயம் பல பிரிச்சனைகள் இருந்திருக்காது, ஆனால் என்ன அடிமைகள் என்ற பட்டதோடு வாழ்ந்திருப்போம்..

எப்படியோ இந்த வருட சுதந்திரதினமும், ஒரு விடுமுறை கொண்டாட்டமாகவே இருக்கட்டும்.... சுதந்திரம் எதற்கு என்ற கேள்வி தான் எழுகிறது இறுதியில்?????

No comments:

Post a Comment