இரவு பத்து மணி,
புறம் எங்கும் கருமை சூழ்ந்திருக்க,
கண் இமைகள் கருவிழியை மூட,
மறு நொடி,
அகத்தினுள் கேட்டது காக்கையின் காலை வணக்கம்,
மரக்கிளைகளின் நடுவே சூரியன் எட்டி பார்க்க,
தலை முடியை கோதி காபி கொடுத்தால் என்னவள்,
கொடுத்தவளை கட்டியணைத்து காதல் ரசம் புரிந்த வேளையில்,
மறுபடியும் யாரோ தலையை கோத,
விளித்து பார்த்தால் அம்மா,
நிஜமான காபியை குடித்து விட்டு தூக்கம் கலைந்தேன்.
சிறிய புன்னகையோடு!!!
No comments:
Post a Comment