Saturday, February 11, 2012

"தீ " என்னும் நெடில், என்னவளுக்காக


தமிழ் எழுத்துக்கள் அத்தனையும்,
காதலித்தேன்,
தமிழில் நாட்டம் கொண்டு அல்ல,
என்னவள் தமிழ் ஆசிரியை என்பதற்காக!!!

கிமு முதல் கிபி வரை,
தமிழை ஆராய்ந்தேன்,
தமிழில் நாட்டம் கொண்டு அல்ல,
கிபி யில் என்னவள் இருக்கிறாள் என்று,

என்ன கொடுமை,
என்னவளுக்காக தமிழை நேசித்தேன்,
என்னவள் விட்டு சென்ற பிறகும்,

நேசித்தது தமிழ் மட்டும்,
என் தாய் மொழியாக!!!!!!!