Friday, December 23, 2011

தினம் ஒரு சுனாமி

"என்னங்க என்னையும், குழந்தைகளையும் வெளியில் கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு, இப்படி தூங்கறீங்களே" - சங்கீதாவின் குரலில் கொஞ்சலும், கோபமும் கலந்தே இருந்தன.


"என்னடி இன்னைக்கு கூட சீக்கிரமே எழுந்து, ம்ம்ம்ம்.... போடி"   - தோய்ந்து போன குரலில் படுக்கையை விட்டு எழுந்தான் ராஜேஷ்.


தூக்க கலக்கத்திலும், நேற்று மனைவியிடம் சொன்னதை நினைத்து பார்த்தான், என்னதான் சோம்பலாக இருந்தாலும், விடுமுறை நாளன்று மனைவி, குழந்தைகளுடன் வெளியில் சென்று அவர்களுக்கு தேவையானதை செய்து, அவர்களின் சந்தோஷத்தில் சுகம் காண்பதே எல்லா கணவன்மார்களின் ஏக்கம். 


சட்டென்று கிளம்பி, அனைவரையும் அழைத்துக்கொண்டு ஒரு நல்ல ஹோட்டலில் மதிய உணவை முடித்தார்கள். முடித்த கையுடன் திரைப்படம் செல்லலாம் என்று மனைவி சொல்ல, மறுக்க மனம் இல்லாமல், "போலாம்டா செல்லம்" என்று அங்கே ஒரு மூன்று  மணிநேரம் கழித்தார்கள். 


பின்பு வீட்டுக்குத்தான் போகிறோம் என்ற நினைப்பில் ராஜேஷ் இருக்க, சங்கீதா தனக்கே உண்டான பாணியில், "ஏங்க கொஞ்சம் ஷாபிங் போயிட்டு போலாமே என்று இழுக்க" வண்டி நேராக கடைதெருவில் போய்நின்றது.


மாலை 6 மணிக்கு கடைக்கு உள்ளே சென்றவர்கள், இரவு வீட்டின் கதவில் சாவியை நுழைக்க மணி பதினொன்றை தாண்டி சென்றுக்கொண்டிருந்தது. 


சரி வாங்க எனக்கு செம உடம்பு வலி, நான் தூங்க போறேன் - சங்கீதா சொல்ல.. குழந்தைகள் பாதி தூக்கத்தில் இருக்க. ராஜேஷ் மட்டும் பேனாவையும்,பேப்பரையும் எடுத்துக்கொண்டு வீட்டின் வெளியே உட்கார்ந்து கணக்கு போட தொடங்கினான்.


ஆம், அன்றைய கடைதெருவில், ராஜேஷின் கிரெடிட் கார்டு அவ்வளவு தேய்ந்ததை எண்ணி, அதன் கணக்கு விவரங்களை பார்த்துக்கொண்டிருந்தான், ஒரு வழியாக இரவு ஒரு மணிக்கு மாதம் இவ்வளவு என்று தனது பட்ஜெட்டை முடித்து இரவின் மடியில் உறங்க....


எழுந்திறீங்க, மணி ஏழு. தனது இயந்திர வாழ்க்கைக்கு தயாரானான் ராஜேஷ்.
பரபரப்பான் அலுவலகம், நல்ல வேலை, கை நிறைய சம்பளம், சம்பளத்தின் முக்கால் பகுதி கிரெடிட் கார்டின் தேய்மான செலவுக்கே போய்க்கொண்டிருந்தது.


மணி ஒன்று, மதிய உணவை காண்டீனில் முடித்து விட்டு, தனது இருக்கைக்கு வந்து அமர்ந்தான், அன்று ஜப்பானில் சுனாமி தாக்கியதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்க.. ஜப்பான் மக்களுக்காக பரிதாபப்பட்டான். 


திடிரென்று ஒரு குரல், ராஜேஷ் சார், "உங்கள மேனேஜர் வர சொன்னார்", சொல்லி விட்டு ஆபீஸ் பாய் போக.


ஆம், ஜப்பான் மக்களுக்காக பரிதாபப்பட்ட ராஜேஷ், தனக்காக பரிதாபப்பட்டான். அடுத்த மாத செலவுகளை நினைத்து, ஆம், வேலை பறிபோன சோகத்துடன், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல். நிலைக்குலைந்தான். 


ஆம், நண்பர்களே. சுனாமி தினமும் எங்கே ஒரு இளைஞனை தாக்கிக்கொண்டுதான் இருக்கிறது,  Recession, financial crisis, economy down இப்படி இன்னும் பல ஆங்கில வார்த்தைகளால் உலாவருகிறது. 


இன்று இது போன்ற சம்பவங்கள் இயற்கையே, அனால் இதை சமாளிக்க அனைவரும் செய்யக்கூடிய விஷயம் முடிந்த அளவு கிரெடிட் கார்டு என்னும் மோகத்தை உதறினால், எறும்பை போல் ஆறு மாதம் அல்ல, ஆறு வருடம் கூட சேமிப்பை வைத்து சுகமாக வாழலாம். 


இந்த வேலை போனா, அடுத்த ரெண்டு மாசத்துல இன்னொரு வேலை கிடைக்காதா என்ன?????!!!!!

No comments:

Post a Comment