Wednesday, December 21, 2011

மறதியில் ஒரு உதவி

மனித சமுதாயத்தில் நடக்கும் ஒரு எதார்த்த சம்பவத்தையும், மனித மறதிகளையும் கதையாக இங்கே தொகுக்கவிருக்கிறேன்...

அது மதுரை ரயில்நிலையம், எப்பொழுதும் கூட்ட நெரிசலில் பயணிகள் அங்கும் இங்கும் அலைந்த படியே காட்சி தரும் மிகவும் பரபரப்பான ரயில்நிலையம். 
ஒரு மதிய நேரம், செங்கோட்டையில் இருந்து மதுரை வந்த ஒரு ரயிலில் இருந்து பயணிகள் வெளியில் சென்றுக்கொண்டிருந்தனர்.  ரயில்நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் வேலை மும்மரமாக நடந்துக்கொண்டிருந்த சமயம், அதில் பொறியாளராக வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒருவன் மதிய உணவுக்காக வெளியே சென்றுக்கொண்டிருந்தான்.

அப்பொழுது ஒரு குரல், "தம்பி, ரெண்டு, மூணு அரிசி மூட்டை இருக்கு, கண்ணு மங்களா தெரியுது, தூக்கவும் முடியல தம்பி.... யாராவது கூலி ஆளுங்க இருந்தா வர சொல்லு தம்பி, பணம் கூட குடுத்தறேன்" என்று சொல்ல...

அந்த பொறியாளர்,"அய்யா இங்கயே இருங்க, இங்க யாரும் இருக்க மாட்டாங்க, ரயில் நிலையம் முன்னாடி இருப்பாங்க வர சொல்றேன்" என்று சொல்லிவிட்டு புறப்படுகிறான்.

திடிரென்று ஒரு குரல்,  "என்ன சார் எப்பிடி வேலை எல்லாம் போகுது, எப்ப முடியும்? சீக்கிரம் முடிக்கணும் சார், அடுத்த மாதம் அமைச்சர் வராரு கண்காணிப்பு கேமராவ திறந்துவைக்க..... என்ன புரியுதா என்று சொல்லிவிட்டு போகிறார் அந்த ரயில்வே அதிகாரி.

பொறியாளரின் மனநிலை முற்றிலும் வேலை பற்றியே சிந்திக்க தொடங்க, எப்படி முடிக்கலாம், இன்னும் ஒரு மாத காலத்தில் எப்படியாவது முடிக்கவேண்டும். இன்னும் ஒரு மாதத்தில் முடியுமா? இல்லை என்றால் நமது பெயர் கெட்டு விடுமே!! அலுவலகத்தில் நமக்கு கெட்ட பெயர் வந்து விடுமே, வீண் பலி சுமக்க வேண்டியதாகிவிடுமே.. ஒரு வேளை வேலை பறிபோய் விட்டால்,என்ன ஆகும்.... ஐயோ," இல்ல என்னால் முடியும், கண்டிப்பாக அடுத்த மாதத்திற்குள் எப்படியாவது முடித்துவிடுவேன் என்ற நம்பிக்கையுடன் மதிய உணவிற்காக ஒரு ஹோட்டலில் நுழைக்கிறான். அளவு சாப்பாடு ஒன்று சொல்லி விட்டு, கை கழுவி விட்டு அமைதியாக உட்க்கார்ந்து திட்ட மிடுகிறான் வேலை நிமித்தமாக....

கிட்ட தட்ட, ஒன்றரை மணிநேரம் கடந்து போய்க்கொண்டிருந்தது, திடிரென்று அந்த வயதானவரின் ஞாபகம் வருகிறது, என்ன செய்வது என்று தெரியாமல், பாதி சாப்பாட்டில் எழுந்து மிக வேகமாக ரயில் நிலையம் நோக்கி ஓடிவருகிறான். அந்த வயதான முதியவரை அங்கே காணவில்லை, உதவி என்பது தக்க சமயத்தில் கிடைக்கா விட்டால் அந்த உதவிக்கே பயன் இல்லை, தான் அறியாமல் செய்த தவறை நினைத்து நொந்து, ஒரு பத்து நிமிடம், அங்கே இருக்கும் இருக்கையில் அமர்ந்து முதியவர் பற்றி யோசிக்கிறான். அவர் எப்படி போயிருப்பார்? யாராவது உதவி செய்திருப்பார்களா? இல்லை இங்கேயே இருக்கிறாரா என்று சுற்றும், முற்றும் பார்க்கிறான், அவர் இருப்பதாக எந்த அறிகுறியும் இல்லை. மிகவும் நொந்து துவண்ட போன மனதுடன் வெளியில் செல்கிறான்.

அப்பொழுது ஒரு குரல்,"கொஞ்சம் நில்லு சாமி, செங்கோட்டை போகணும் சாமி, இந்த ரெண்டு மூட்டைய கொண்டு வந்து குடு, உனக்கு பணம் குடுக்குறேன் என்று அந்த வயதான மூதாட்டி சொல்ல... மிக மன நிறைவுடன் அணைத்து மூட்டைகளையும் தூக்கிக்கொண்டு, அந்த மூதாட்டியையும் அழைத்துக்கொண்டு, ஒரு இருக்கையில் அவரை அமரசொல்லி விட்டு, தண்ணீர் பாட்டில் ஒன்று அவரிடம் கொடுத்துவிட்டு வெளியில் வர... பச்சை கோடி பறக்க, ரயில் அதன் இலக்கை நோக்கி பயணிக்க.... இவனும் இலக்கை அடைந்த நிம்மதியுடன் நடை போடுகிறான்....

2 comments:

  1. machi idhu unmai kadhai yada....ennamo irukkuda unakkulla

    ReplyDelete
  2. last week madurai la nadanthithu, ennala help pana mudiyala......... but kathaikkaaga last la konjam add pannunen..

    ReplyDelete