நான் மட்டும் தனியே,
கிடைக்க மாற்றாலா என்ற வருத்ததுடன்,
என்னவளை தேடி ஒரு பயணம் செய்தேன்,
மலையாள மலைகளை தாண்டி,
தமிழக எல்லைக்குள் வந்தும் தென்ப்படவில்லை அவள் என்ற என் கற்பனை,
கோவை மாநகரை கடந்த பொழுது என் தேடலுக்கு ஓய்வு தந்தேன்,
காரணம் இருந்திருந்தால் இத்தனை வருடங்கள் தென்ப்படாமலா போவாள்,
கோவை எல்லையை தாண்டி, தீரன் சின்னமலையாம் பிறந்த வீர மண்ணில்,
சிறிய புன்னகையோடு வரவேற்றாள் ஒருத்தி, என் கற்பனைக்கு உருவம் தந்தேன் அந்த இடத்தில்,
தயக்கத்துடன் பேச ஆரிம்பித்தேன், வெட்கம் பெண்ணுக்கு மட்டும் சொந்தம் அல்ல என்று உணர்ந்தேன்,
காரணம் அவளை கண்டு நானும் வெட்கப்பட்டேன்,
பல பல விவாதங்கள், சந்தேங்கங்கள், சண்டைகள், என்று தொடர்ந்து,
காதலை சொல்ல வீரத்தை வரவழைத்து வாயெடுத்தேன்,
ஒரு சிறிய புகைப்படத்தை காட்டி என் மகன் என்று சொன்னால்,
பதில் ஏதும் பேசாமல் கண்களுக்குள் கண்ணீரை வைத்துக்கொண்டு,
அம்மா என்று சொல்லி மகனாக திரும்பினேன்!!!!!
No comments:
Post a Comment