ஆயிரம் கதை சொல்லி வளர்த்த அன்னையை பற்றி எழுதவா??? அன்பின் இலக்கணமாய் இருந்து என்னை வளர்த்த தந்தையை பற்றி எழுதவா??? எனக்கு அம்மாவை இருந்து என்னை ஆளாக்கிய அக்காவை பற்றி எழுதவா??? இடையில் வந்து, என் இறுதி ஊர்வலத்தில் இருக்க போகும் நண்பர்களை பற்றி எழுதவா??? தவறு என்று தெரிந்தும் நான் செய்த தவறான என் காதலை பற்றி எழுதவா??? ஆயினும் எழுதுகிறேன், என்னை யார் என்று தெரிந்துக்கொள்ள.... தெரிந்தால் சொல்லுங்கள், இல்லையேல், என்னை பின்தொடருங்கள்.........தெரிந்துக்கொள்ள
Saturday, July 10, 2010
மூன்று வயது காதல்
ஒரு சிறுவன் தன் ஆறு வயதில்,
ஒரு மூன்று வயது சிறுமையின் புகைப்படத்தை கண்டெடுக்கிறான்.
அப்போதே அந்த சிறுமி மீது காதல்கொண்டு,
இவளைத்தான் மணமுடிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறான்.
காலம் கடந்து செல்ல, வாழ்க்கையின் பாதைகளும் மாற,
இருபது வருடத்திற்கு பிறகு அவனுக்கு திருமணம் முடிந்து சந்தோஷமாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறான்.
ஒரு நாள் அவனுடிய மனைவியிடம் அந்த புகைப்படம் கிடைக்க,
எப்படி என்னுடிய மூன்று வயது புகைப்படம் உங்களிடம் என்று கேட்டாள்?
திகைத்து நின்றான்.
உண்மை காதலுக்கான அர்த்தம் புரிந்து!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment