Wednesday, April 27, 2011

காகித பூ



யாருக்காக காத்திருக்கிறேன்,
பறித்தவன் எங்கே போனான்,
அவன் நெஞ்சில் பதிந்தவள் எங்கே போனாள்,
என்னை தனியே விடுத்து,

எவளோ ஒருத்திக்காக,
என்னை பறித்தான்,

காதல் சொல்லும் வேளையிலும்,
கையில் சின்னமாய் நான்,
கள்ளிக்காட்டு காதலுக்கும் நான்,
கடைத்தெரு காதலுக்கும் நான்,
கல்லூரி காதலுக்கும் நான்,
கல்யாணம் பின் காதலுக்கும் நான்,
கப்பல் மூழ்கிய காதலுக்கும் நான்,

ஆனால் வந்தபிறகோ எனது நிலை,
காய்ந்துப்போன காகித பூ தானோ!!!

No comments:

Post a Comment