Tuesday, April 26, 2011

எங்கள் வேர்வை துளிகள் எங்கே???



இதோ ஒரு வருட உழைப்பின் ஊதியம் கிடைக்குமா???
என்ற ஏக்கத்தில்,

உதிர்ந்த இந்த எழுத்துக்களை எனது சக நண்பர்களுக்கு ,
சமர்ப்பிக்கிறேன்,

கானல் நீர் வெறும் காட்சி பிழையாக இல்லாமல்,
எங்கள் வறண்ட தொண்டைக்கு தேனாக அமையுமா???

இதோ ஒரு வருட வெள்ளாமை முடிந்து,
விளைச்சல் சந்தைக்கும் வந்தாச்சு,
நல்ல விலைக்கு போகுமான்னு,
கவலையில நொந்து போன விவசாயிகள் (அட நாங்க தானுங்க),

 ஆமாங்க முடியாமதான் எழுதுறேன்,
என்னென்னு சொல்ல,
ஏதுன்னு சொல்ல,
கேட்டா உங்களுக்கே கண்ணீர் வரும்,
ஆனந்த கண்ணீர் இல்லங்க,
ரத்த கண்ணீர்!!!

கண்ணு ரெண்டும் அவுஞ்சுப்போச்சு- computer முன்னாடியே இருந்தா!!!
காது ஜவ்வு கிளிஞ்சுப்போச்சு - cell phone-அ காதுல இருந்து  எடுத்தாதான!!!
வாயி கோணலா மாறிப்போச்சு - Radio jacky-அ நாங்க!!!

Appraisee போட்டது 5,
Appraiser போட்டது 4,
Review-ல போட்டது 3,
Discussion-ல போட்டது 2,
HR போடுவாங்க 1,


ஆனாலும் சொல்லுவாங்க Outstanding-னு,
அதையும் கேட்டுக்கணும் காதுல பஞ்ச வெச்சுக்கிட்டு,

வழக்கம் போல எதிர்பார்ப்புடன் நாங்கள்,
ஏமாற்ற தயாராக அவர்கள்,
  
பார்க்கலாம் காத்திருங்கள்,
எனது அடுத்த மாத பதிப்பில் தெரியும்,
வென்றது,
எதிர்பார்ப்பா???
ஏமாற்றமா???

இதோ இந்த எழுச்சி வரிகளோடு முடிக்கிறேன்,

“Until victory always” -சேகுவேரா.......

No comments:

Post a Comment